search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாளை மத்திய ஜெயில்"

    பாளை மத்திய ஜெயிலில் சிவகிரியைச் சேர்ந்த கைதி திடீரென்று மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43), விவசாயி. இவருக்கும் அந்தப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் ஏற்பட்ட மோதலில் கணேசன் மீது சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிவகிரி போலீசார் கணேசனை கைது செய்து பாளை மத்திய ஜெயிலில் அடைத்தனர். கணேசனின் உறவினர்கள் அவரை ஜாமீனில் எடுக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஜெயில் அறையில் கணேசனுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை கணேசன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து நெல்லை கோட்டாட்சி தலைவர் மைதிலி நேரில் சென்று உண்மையில் அவருக்கு நெஞ்சுவலி காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகிறார்.
    பாளை மத்திய ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா என்பது குறித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    பாளை மத்திய ஜெயிலில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு பீடி, சிரெட், செல்போன், கஞ்சா உள்ளிட தடைசெய்யப்பட்ட பொருட்கள், புழக்கத்தில் உள்ளதா? என்று போலீசார் அவ்வப்போது அறிவிப்பில்லாமல் தீடீர் சோதனை நடத்துவார்கள்.

    அதே போன்று இன்று அதிகாலை பாளை மத்திய ஜெயிலில் அதிரடி சோதனை நடத்த மாநகர போலீசார் கமி‌ஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் துணை கமி‌ஷனர் சுகுனாசிங் மேற்பார்வையில் உதவி கமிஷ்னர் விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராமையா, காளியப்பன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை பாளை மத்திய ஜெயிலுக்கு சென்றனர்.

    அங்கு ஒவ்வொரு பிளாக்காக சென்று சோதனை நடத்த போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். பின்னர் காலை 6 மணி முதல் 7 .30 வரை அதிரடி சோதனை நடந்தது. கைதிகள் தங்கும் அறை, குளியல் அறை, கழிவறை மற்றும் மைதானத்தில் உள்ள சந்தேகப்படும் இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    அதை போல் முக்கிய கைதிகளிடமும். சோதனை நடத்தினார்கள் சுமார் 1 .30 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் ஜெயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர்கள் ஆய்வு செய்து விட்டு திரும்பினர் பாளை ஜெயிலில் சோதனை நடந்த போது ஜெயிலின் வெளிப்புறமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. #tamilnews
    ×